பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:51
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.வி.எல்., எனப்படும், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்கி, அதில் திரட்டும் நிதியை, சிறப்பு டிவிடெண்டாக வழங்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின், 100 சதவீத துணை நிறுவனமான, ஓ.வி.எல்., 21 நாடுகளில், 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.கடந்த, 2015ல், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு, ஓ.என்.ஜி.சி.,யை மத்திய அரசு வலியுறுத்தியது. அப்போது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்ததால், பங்கு வெளியீட்டிற்கு சாதகமற்ற சூழல் நிலவுவதாக, ஓ.என்.ஜி.சி., தெரிவித்தது.
தற்போது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பங்கு வெளியீட்டிற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என, மத்திய அரசு கருதுகிறது. பொதுத் துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம், நடப்பு நிதியாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால், ஓ.வி.எல்., பங்கு வெளியீடு மேற்கொள்ள, அதன் தாய் நிறுவனமான, ஓ.என்.ஜி.சி.,யிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|