பதிவு செய்த நாள்
12 செப்2018
00:16
அரசு கேபிள், ‘டிவி’யில், உள்ளூர் சேனல்களை ஒளிபரப்புவதற்கான கட்டணத்தை குறைக்க, நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கடந்த, 2007ம் ஆண்டு, அரசு கேபிள், ‘டிவி’யை துவங்கியது. 2011ம் ஆண்டு முதல், குறைந்த கட்டணமாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள் என, முழு வீச்சில் தன் சேவையில் ஈடுபட்டது.கடந்த, 2014ம் ஆண்டு முதல், சென்னை உட்பட நான்கு மாநகரங்களில், ‘டிஜிட்டல்’ முறையில் கேபிள், ‘டிவி’ சேவை துவங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், 27.5 லட்சம், ‘செட் டாப் பாக்ஸ்’கள், இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் சேனல்களை ஒளிபரப்புவது தொடர்பான, ‘டெண்டர்’ சமீபத்தில்
அறிவிக்கப்பட்டது.இதற்கு, உள்ளூர் சேனல் உரிமையாளர்களிடமிருந்து, சரியான வரவேற்பு இல்லாததால், கட்டணத்தை குறைக்க, கேபிள், ‘டிவி’ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் கூறியதாவது:அரசு கேபிள், ‘டிவி’யில் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ‘அனலாக்’ முறை ஒளிபரப்பின் போது, 1,000 உள்ளூர் சேனல்கள், அரசு கேபிள், ‘டிவி’யில் ஒளிபரப்பாகின.
இதற்காக, 6 கோடி ரூபாய் வரை, கட்டணம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் முறைக்கு மாறிய பின், சமீபத்தில் இதற்கான புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டது.இதில், 250 உள்ளூர் சேனல்கள் கூட விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில், அரசு கேபிள், ‘டிவி’ நிர்வாக குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
இதில், உள்ளூர் சேனல்களை ஒளிபரப்புவதற்கான கட்டணத்தை குறைக்க, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.டிஜிட்டல் முறைக்கு மாறிய, 27 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, புதிய கட்டண தொகை நிர்ணயிக்கப்பட்டு, விரைவில் இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிட, குழுவில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்
கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|