பதிவு செய்த நாள்
20 செப்2018
23:17
ஈரோடு : மஞ்சள் வரத்து சரிந்ததுடன், தரம் குறைவாகவும் வருவதால், விலை சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில், உற்பத்தி குறைவால் விலை உயரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திரா, கர்நாடகா உட்பட வட மாநிலங்களில், மஞ்சள் உற்பத்தி அதிகரித்ததால், விலை உயரவில்லை.இருப்பினும், தமிழக மஞ்சளின் தரம் கூடுதலாக இருக்கும் என்பதால், இவற்றின் விலை எப்போதும் உயர்ந்து காணப்படும். ஆனால், கடந்த, 20 நாட்களாக விரலி, குவிண்டால், 5,500 ரூபாய் முதல், 7,500 ரூபாய்க்குள்ளும்; கிழங்கு, குவிண்டால், 4,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரையில் மட்டுமே விலை போகிறது.
இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது: தரமற்ற மஞ்சள் வரத்தாலும், தேவை குறைவாலும் விலை குறைந்துள்ளது. தமிழகத்திலும் உற்பத்தி குறைவால், தரமான மஞ்சளை இருப்பு வைத்துள்ளனர். தரம் குறைவாக உள்ள மஞ்சளை மட்டுமே விற்கின்றனர்.
பண்டிகை காலம் துவங்க இருப்பதால் தேவை அதிகரிக்கும்; அப்போது விற்கலாம் என, பலர் இருப்பு வைத்துள்ளனர். எனவே, தற்போது மஞ்சள் விலை கடுமையாக சரிந்து வருகிறது. அடுத்த மாதம் முதல், விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|