ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம் ... ‘ப்ளூடார்ட்’ நிறுவனத்தின் புதிய இலக்கு ‘ப்ளூடார்ட்’ நிறுவனத்தின் புதிய இலக்கு ...
விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
23:39

புதுடில்லி : சென்­னை­யைச் சேர்ந்த, ‘டாபே’ நிறு­வ­னம், விவ­சா­யி­க­ளுக்கு டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை, வாட­கைக்கு பெறும் வச­தியை செய்து கொடுத்­துள்­ளது.

இது குறித்து, டாபே நிறு­வன தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­காரி, மல்­லிகா ஸ்ரீனி­வா­சன் கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­தின் சமூக பொறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் ஆகி­ய­வற்றை, விவ­சா­யி­கள் வாட­கைக்கு பெற வசதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­காக, ‘ஜேபார்ம் சர்­வீ­சஸ்’ என்ற இல­வச மொபைல் போன், ‘ஆப்’ உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இந்த ஆப் மூலம், சாகு­ப­டிக்கு தேவை­யான டிராக்­டர், நவீன தொழில்­நுட்ப வேளாண் இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்றை, விவ­சா­யி­கள் வாட­கைக்கு பெற­லாம்.

இது, நவீன வேளாண் சாத­னங்­கள், புதிய தொழில்­நுட்­பங்­கள் ஆகிய வச­தி­களை பெற முடி­யாத விவ­சா­யி­க­ளுக்கு, பேரு­த­வி­யாக இருக்­கும். விவ­சா­யி­கள் வரு­வாயை, 2022ல் இரட்­டிப்­பாக்க வேண்­டும் என்ற, பிர­த­ம­ரின் திட்­டத்­திற்­கும் வலு சேர்க்­கும். விவ­சா­யி­கள், ‘ஆப்’பை மொபைல் போனில் பதி­வி­றக்கி, தங்­க­ளி­டம் உள்ள டிராக்­டர், வேளாண் சாத­னங்­கள் உள்­ளிட்ட விப­ரங்­களை அளிக்­க­லாம். அது­போல, தங்­க­ளுக்கு தேவைப்­படும் வேளாண் சாதன விப­ரங்­க­ளை­யும் வெளி­யி­ட­லாம்.

குஜ­ராத் உள்­ளிட்ட நான்கு மாநி­லங்­களில், சோதனை அடிப்­ப­டை­யில் செயல்­ப­டுத்­திய இத்­திட்­டத்­தில், 60 ஆயி­ரம் பேர் இணைந்து, 1 லட்­சத்­திற்­கும் அதி­க­மான, ‘ஆர்­டர்’களை வழங்­கி­யுள்­ள­னர். தற்­போது, நாடு முழு­வ­தும் இச்­சேவை விரி­வாக்­கம் செய்­யப்­ப­டு­கிறது. இந்த ஆப் மூலம், வானிலை நில­வ­ரம், வேளாண் பொருட்­கள் விலை, வர்த்­த­கம் உள்­ளிட்ட தக­வல்­க­ளை­யும் இல­வ­ச­மாக பெற­லாம். மொபைல் போன் இல்­லா­த­வர்­கள், இல­வச அழைப்பு எண்ணை பயன்­ப­டுத்­த­லாம். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)