பதிவு செய்த நாள்
10 அக்2018
23:20
திருப்பூர்:சீசன் துவக்கத்திலேயே பஞ்சு கொள்முதல் விலை, கேண்டி, 46,200 ரூபாயாக அதிகரித்ததால், ஜவுளித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக நுாற்பாலைகள், மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா, ம.பி., மாநிலங்களில் பருத்தி பஞ்சு கொள்முதல் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், சீசன் துவக்கத்தில் பஞ்சு விலை குறைந்தும், நிறைவடையும்போது, விலை அதிகரித்தும் காணப்படும்.
கடந்த, 2017 –- 18 பருத்தி சீசன் துவக்கத்தில், 38,500 ரூபாயாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு கொள்முதல் விலை, சீசன் நிறைவில், 48,500 ரூபாயை எட்டியது. 2018 – 19 பருத்தி சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46,200 ரூபாயாக உள்ளது.நுாற்பாலைகளுக்கு வரும் போது, 47,800 ரூபாயாகிறது. சீசன் துவக்கத்திலேயே மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது, தமிழக நுாற்பாலை துறையினரை கவலை அடைய செய்துள்ளது.
இது குறித்து, இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளதால், தற்போது துவங்கியுள்ள புதிய சீசனில், பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது; ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, 46,200 ரூபாயாக உள்ளது.டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவினம் அதிகரித்துள்ளது.
முந்தைய சீசனைவிட, நடப்பு சீசனில், மூலப்பொருளுக்கான மொத்த செலவினம், 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நுால் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|