பதிவு செய்த நாள்
13 அக்2018
00:05
சென்னை:டி.வி.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமான, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம், சென்னை அருகே உள்ள ஒரகடத்தில், இயந்திர வார்ப்புகளை தயாரிக்கும், பவுன்ட்ரி எனும் வார்ப்பகத்தை துவங்கி உள்ளது. 150 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த வார்ப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில், 8,000 டன் உற்பத்தி திறன் கொண்ட, 1.9 கிலோ முதல், 7.2 கிலோ வரையிலான இயந்திர வார்ப்புகளை தயாரிக்கலாம்.இந்த ஆலையை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமைச்செயல் அதிகாரியுமான, யங் கீ கூ துவக்கி வைத்தார்.இயந்திர அலுமினிய வார்ப்புகளை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள, சுந்தரம் கிளேட்டன் நிறுவனம்,பயணியர் கார், வர்த்தக வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு, ஆண்டுதோறும், 50 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட வார்ப்புகளை தயாரித்து வழங்கி வருகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர்,லஷ்மி வேணு கூறியதாவது: இந்த ஆலையின் உற்பத்தியானது, பிரதானமாக, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின்தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த ஆலை, ஹூண்டாய் ஆலைக்கு அருகில் உள்ளதால், வினியோகத்துக்கான நேரச் செலவு மிகவும் குறையும்.வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்ற வேண்டும் என்ற எங்களது தீவிர முனைப்பை, இந்த புதிய ஆலையானது மேலும் வலுப்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|