பதிவு செய்த நாள்
15 அக்2018
23:39
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஆகஸ்டில், 4.53 சதவீதம்; 2017, செப்டம்பரில், 3.14 சதவீதமாக இருந்தது.
இதற்கு முன், ஜூலையில் மொத்த விலை பணவீக்கம், 5.27 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது.உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வால், இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, நாட்டின் மொத்த விலை பணவீக்கம் உயர்ந்து உள்ளது.செப்., மற்றும் ஆகஸ்டில், உணவுப் பொருட்கள் பணவாட்டம், முறையே, 0.21 சதவீதம்; 4.04 சதவீதமாக இருந்தன.இதே காலத்தில், காய்கறிகள் பணவாட்டம், முறையே, 3.83 சதவீதம்; 20.18 சதவீதமாக காணப்பட்டன.
எரிபொருள் மற்றும் மின்சாரம் பணவீக்கம், 16.65 சதவீதமாக இருந்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் மொத்த விலை பணவீக்கம், முறையே, 17.21 சதவீதம்; 22.18 சதவீதம் மற்றும் 33.51 சதவீதம் என்ற அளவில் இருந்தன.உணவுப் பொருட்களில், உருளைக்கிழங்கு பணவீக்கம், 80.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெங்காயம் மற்றும் பழங்கள் பணவாட்டம் கண்டு, முறையே, 25.23 சதவீதம் மற்றும் 7.35 சதவீதமாக இருந்தன.கடந்த, செப்டம்பரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.77 சதவீதமாக இருந்தது.
இது, ஆகஸ்டில், 3.69 சதவீதமாக காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையில், நிதிக் கொள்கை முடிவுகளை எடுக்கிறது.ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்க இலக்கை, 4 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது. இந்த இலக்கிற்குள் சில்லரை பணவீக்கம் உள்ளதால், இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ‘ரெப்போ’ வட்டி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|