5 மாதங்களில் இல்லாத அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை குறைந்தது 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை குறைந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ...
எல்.இ.டி., பல்பு விற்பனையில் அஞ்சல் துறை :மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களும் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
23:53

புதுடில்லி:தேசிய அஞ்சல் துறை, மின் சிக்கனத்திற்கான, எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் களமிறங்கியுள்ளது.இணைய பயன்பாடு பரவலாகத் துவங்கிய பின், அஞ்சலக துறையின் வருவாய் குறைந்துள்ளது.
மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., போன்றவற்றின் வசதியால், பாரம்பரிய கடிதப் போக்குவரத்து முறை மங்கிவிட்டது.கட்டண சேவைமொபைல் போன் மூலம், சுலபமாக பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி வந்து விட்டதால், தபால்காரர் மூலம் பணப் பட்டுவாடா செய்யும், ‘மணியார்டர்’ நடைமுறை முடிவுக்கு வந்தது.இது போன்ற, தவிர்க்க முடியாத, காலத்திற்கேற்ற வளர்ச்சியால், தேசிய அஞ்சல் துறை வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, மின்சாரம், சொத்து வரி உள்ளிட்ட, அரசு சார்ந்த சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு பணிகளை, அஞ்சல் துறை மேற்கொள்கிறது.அத்துடன், சிறுசேமிப்பு திட்டங்கள் தவிர்த்து, வணிக ரீதியிலான நிதிச் சேவைகளை மேற்கொள்ள, ‘இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்’ மூலம், வங்கிச் சேவையிலும் கால் பதித்துள்ளது.
‘உஜாலா’ திட்டம்
இந்நிலையில், மத்திய அரசின், ‘உஜாலா’ திட்டத்தின் கீழ், அனைத்து வகை மின் சிக்கன சாதனங்கள் விற்பனையிலும், அஞ்சல் துறை களமிறங்கி உள்ளது.இதற்காக, குறைந்த மின்செலவில் இயங்கும் எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை தயாரிக்கும், ‘எனர்ஜி எபிசியன்ட் சர்வீசஸ்’ நிறுவனத்துடன், அஞ்சல் துறை கைகோர்த்துள்ளது.இரு தினங்களுக்கு முன், இரு தரப்பும் இடையே, மின் சாதன விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, எனர்ஜி எபிசியன்ட் சர்வீசஸ் நிறுவனம், மின் சிக்கனத்திற்கான, எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள் மற்றும் ஐந்து நட்சத்திரக் குறியீடு உள்ள மின்விசிறிகளை, அஞ்சல் துறைக்கு வினியோகிக்கும்.மாற்றித் தரப்படும்இந்த மின் சாதனங்கள், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களில், இப்பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன.
இந்த அஞ்சலகங்கள், உஜாலா திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டு, உத்தரவாத காலத்திற்கு முன் பழுதாகும், எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் ஆகியவற்றை மாற்றித் தரும் வசதியை கொண்டிருக்கும்.மின் சாதனங்களை விற்பனை செய்யும், பாரம்பரிய கடைகளுக்கு நிகரான செயல்பாடுகள், சேவைகளை, அஞ்சலகமும் வழங்கும்.மேலும், மின் சாதனங்களுக்கான தொகையை, மின்னணு மூலம் செலுத்தும் வசதியையும் அஞ்சலகங்கள் அளிக்கும்.இதனால், நுகர்வோரிடம் அஞ்சல் துறையின் மின் சாதன விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சுலபமாக மாற்றும் வசதிதேசிய அஞ்சல் துறை, பெரு நகரம், நகரம், சிறு நகரம், கிராமம் என, நாடு முழுவதும் பரவலான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதனால், இத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம், மின் சிக்கன சாதனங்களை, நுகர்வோர் சுலபமாக பெற வழி ஏற்பட்டுள்ளது. மேலும், உத்தரவாத காலத்திற்குள், செயல்படாமல் போகும், எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் ஆகியவற்றை, நுகர்வோர்கள், அருகில் உள்ள அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.சவுரப் குமார் நிர்வாக இயக்குனர், ‘எனர்ஜி எபிசியன்ட் சர்வீசஸ்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)