பதிவு செய்த நாள்
20 அக்2018
00:49
மும்பை: வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளை, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. இதனால் இத்துறையைச் சேர்ந்தவர்கள், ‘அப்பாடா’ என, மூச்சுவிடத் துவங்கி உள்ளனர்.அண்மைக்காலமாக, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போதிய பணப்புழக்கம் இன்றி தடுமாறி வருகின்றன. அவற்றால் சந்தையில் இருந்து நிதி திரட்ட முடியவில்லை என்பதோடு, வங்கிகளும் இத்துறை நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றன.இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் கூடுதல் கடன் கிடைப்பதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது. இது தான், இத்துறைக்கு ஆக்ஸிஜன் கொடுத்துள்ளது.இதன்மூலம், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு ஓர் உத்வேகத்தை அளித்துள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், வங்கி சாரா நிதி சேவை நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வந்தன. அவற்றுக்கு வங்கிகளிடமிருந்து சுலபமாக கடன் கிடைத்து வந்ததே, இந்த வளர்ச்சிக்குக் காரணம். ஆனால், சமீபத்தில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்கள், பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்கு, வங்கிகள் தயக்கம் காட்டத் தொடங்கின. மேலும், இத்துறைக்கு கடன்பத்திர மியூச்சுவல் பண்டுகளில் இருந்து கிடைத்து வந்த கடன் வசதியும் நின்றுபோய்விட்டது.இந்திய நிதிச் சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்து வருகிறது. அக்டோபர் மாதத்தில், 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக் கடன் பத்திரங்களை வாங்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்ததன் மூலம், ரிசர்வ் வங்கி, வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது,ஆனால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் கிடைத்து வந்த கடன் அளவில், பெரும் மாறுதல் எதுவும் ஏற்படவில்லை.மேலும் அவற்றால், நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற முடியாது, ஏனெனில், அவை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வைத்திருக்கவில்லை.வங்கிகளுக்குக் கூடுதல்சலுகைகள் கொடுப்பதன் மூலம் மட்டுமே, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.மேலும், இந்தியாவின் மிகப்பெரும் வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன்களில், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தான் வாங்கிக்கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளது. அது ஏற்கனவே, 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் வாங்குவதாக திட்டம் வைத்திருந்தது. இப்போது, கூடுதலாக கடன்களை எடுத்துக்கொள்வதன் மூலமும், வங்கியல்லாத நிதிச் சேவை நிறுவனங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.இத்தகைய சூழலால், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நெருக்கடிகளிலிருந்து மீளும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.
வீட்டுக் கடனும் சிக்கலாகும் : வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தற்போதைய நிதிச் சிக்கல்கள் நீடிக்கும்பட்சத்தில், அது வீட்டுக் கடன் வழங்கலையும் பாதிக்கும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஏற்கனவே வீடுகளை விற்பனை செய்ய தடுமாறும் நிலையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதும் அவற்றுக்கு சிக்கலாகிவிடும்.
நோமுரா, நிதி ஆலோசனை நிறுவனம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|