பதிவு செய்த நாள்
21 அக்2018
00:40
புதுடில்லி: தனியார் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., வங்கியின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஜூலை –செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், 20.6 சதவீதம் அதிகரித்து, 5,006 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த, 2017- – 18ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 4,151 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வங்கியின் மொத்த வருவாய், 21.2 சதவீதம் உயர்ந்து, 23,276 கோடியில் இருந்து, 28,215 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கியின் நிகர வட்டி வருவாய், 20.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,752 கோடியில் இருந்து, 11,763 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், வங்கியின் மொத்த வாராக் கடன், 1.26 சதவீதத்தில் இருந்து, 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேசமயம், இதே காலத்தில், நிகர வாராக் கடன், 0.43 சதவீதத்தில் இருந்து, 0.40 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|