பதிவு செய்த நாள்
22 அக்2018
06:14
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயமாக்கல் உள்ளிட்டவற்றால், வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில், இந்தியாவில், இதனால் அதிக பாதிப்பு இருக்காது என, ‘மெக்கின்சி குலோபல் இன்ஸ்டிடியூட்’ அறிக்கை தெரிவிக்கிறது.
இன்னமும், ரோபோ இயந்திரங்களுக்கு பதில், தொழிலாளர்களை பயன்படுத்துவதே பொருளாதார நோக்கில் ஏற்றதாக இருக்கும் நிலையில், இந்தியா இருப்பதாக தெரிவித்துள்ள மெக்கின்சி அறிக்கை, தானியங்கி மயமாக்கல் இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என, தெரிவிக்கிறது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி மயமாக்கல் உதவியிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் எனில், இந்தியா கல்வி முறை மற்றும் திறன் பயிற்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகளில் அதிக கவனம் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|