பதிவு செய்த நாள்
23 அக்2018
03:21
புதுடில்லி : ‘அபெல் இந்தியா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது. ‘அபெல் ஹோல்டிங்ஸ்’ எனும், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின், இந்திய பிரிவு தான், அபெல் இந்தியா நிறுவனம்.
இந்நிறுவனம், உலகளவிலான தொழில்நுட்ப வணிகத்தில் உள்ளது. குறிப்பாக மொபைல் செயலிகள், வலைதள வர்த்தக நிறுவனங்களுக்கான தரவுகள் ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டுள்ளது. அபெல் இந்தியா நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 650 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அபெல் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த ஜூலை மாதம் விண்ணப்பம் செய்திருந்தது. பரிசீலனைக்கு பின், செபி பங்கு வெளியீட்டுக்கு வர தற்போது அனுமதி அளித்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, செயல்பாட்டு மூலதனத்துக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த, 2009ம் ஆண்டில், இந்நிறுவனத்தின் சிறிய அளவிலான பங்குகளை, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்’ மற்றும் ‘நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|