பதிவு செய்த நாள்
23 அக்2018
23:52
புதுடில்லி L ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, சான்ட்ரோ காரை, மீண்டும் அறிமுகம் செய்துள்ளது, ‘ஹூண்டாய்’ நிறுவனம். இதன் விலை, மாடலை பொறுத்து, 3. 89 லட்சம் ரூபாயிருந்து, 5. 45 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இந்த அறிமுக விலை, முதல், 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே முன்பதிவு துவக்கப்பட்டு, 13 நாட்களுக்குள்ளாகவே, 23,500 கார்களுக்கு வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து நேற்று அறிமுக விழாவில் கலந்துகொண்ட, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான, ஒய்.கே.கூ கூறியதாவது: தென்கொரியாவில் உள்ள நான்யாங், இந்தியாவில் சென்னை ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினர், இந்த காரை சிறப்பாகவும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் வழங்கி உள்ளனர். முற்றிலும் புதிய சான்ட்ரோ காருக்காக, கடந்த மூன்று ஆண்டுகளில், 750 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
சான்ட்ரோ கார், முதன் முதலாக சென்னையில் தயாரிக்கப்பட்டு, 1998 செப்டம்பரில் அறிமுகமானது. 13 லட்சம் கார்களுக்கு மேல் விற்பனை ஆனது. பின்னர், 2014 டிசம்பரில், இந்த கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் சந்தைக்கு வந்துள்ள, புதிய சான்ட்ரோ கார், மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர், செலிரியோ டாடாவின் டியாகோ கார் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|