‘எச் – 1பி’ விசா சான்றிதழ் ‘டாப் – 10’ல் டி.சி.எஸ்., ‘எச் – 1பி’ விசா சான்றிதழ் ‘டாப் – 10’ல் டி.சி.எஸ்., ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 சரிவு ...
பெட்ரோல் விற்பனை விதிகளை தளர்த்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2018
00:03

புதுடில்லி : பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை உரிம விதிகளை தளர்த்தி, அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

தற்போது, பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு, விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் உள்ள, 63,492 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பெரும்பான்மை நிலையங்கள் இந்நிறுவனங்கள் வசம், உள்ளன.தனியார் துறையைச் சேர்ந்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, ராயல் டச் ஷெல் ஆகிய நிறுவனங்களிடம் மிகக் குறைவாகவே, பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

விலை நிர்ணயம் :
போட்டியற்ற எரிபொருள் சந்தையில், பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை, மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் வைப்பதே சட்டமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கு தனித் தனியாக விலை நிர்ணயித்தாலும், பைசா கணக்கில் தான் வித்தியாசம் உள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில், அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்த்து, சந்தையில் போட்டியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் பயனடைவர் என்பதால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட உள்ளன.

உயர்மட்ட குழு :
இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து ஆராய, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், பொருளாதார வல்லுனர், கிரித் பரிக், பெட்ரோலிய துறை முன்னாள் செயலர் சதுர்வேதி, ஐ.ஓ.சி., முன்னாள் தலைவர், எம்.ஏ. பதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, பெட்ரோல், டீசல் விற்பனை உரிம விதிமுறைகளை பரிசீலித்து, அதில், தனியார் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும். தனியார் துறையினர், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் நுழையவோ அல்லது வர்த்தகத்தை விரிவுபடுத்தவோ தடையாக உள்ள அம்சங்கள் கண்டறியப்படும்.

விற்பனை உரிமம் தொடர்பான விதிகளை மேலும் தளர்த்த முடிவு செய்தால், அது குறித்தும், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். இக்குழுவின் அறிக்கை, 60 நாட்களுக்குள் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலீடு :
பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் பெற, ஒரு நிறுவனம், குறைந்தபட்சம், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கச்சா எண்ணெய் வள ஆய்வு, எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, வினியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக, இத்தொகை அவசியம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)