பதிவு செய்த நாள்
27 அக்2018
02:56
அக் : தனியார் துறையைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஜூலை – செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், 10.6 சதவீதம் உயர்ந்து, 83.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 75.65 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 1,632.50 கோடி ரூபாய் என்ற அளவில் மாற்றமின்றி காணப்பட்டது. மொத்த வாராக் கடன், 2,136.19 கோடியில் இருந்து, 3,307.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நிகர வாராக் கடன், 3.24 சதவீதத்தில் இருந்து, 4.41 சதவீதமாக அதிகரித்து, 2,051.51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான அரையாண்டில், வங்கியின் மொத்த வருவாய், 3,329.90 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 3,252.88 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், வங்கியின் நிகர லாபம், 223.62 கோடியில் இருந்து, 129.65 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|