பதிவு செய்த நாள்
29 அக்2018
06:52
‘போனஸ்’ என்றவுடனே, அனைவருக்கும் உற்சாகம் பிறக்கும். பலருக்கும் போனஸ் கிடைக்க வாய்ப்புள்ள காலம் இது. தீபாவளி பரிசோ, ஆண்டு போனசோ, அதை மனம் போன போக்கில் செலவிடாமல், திட்டமிட்டு சரியாக செலவிட வேண்டும். அப்போது தான், போனசின் முழுமையான பலனை பெறலாம். அதற்கான வழிகள்:
கடனுக்கு முன்னுரிமை:
போனஸ் தொகை கையில் கிடைத்ததும், பெரிய பொருட்கள் அல்லது நீண்டகாலமாக வாங்க விரும்பும் பொருட்களை வாங்கத் தோன்றும். ஆனால், அதற்கு முன் அடைக்க வேண்டிய கடன்கள் இருந்தால், அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட அதிக வட்டி கடனை, முழுமையாகவோ அல்லது பகுதியளவோ அடைக்க வேண்டும்.
காப்பீடு ஆய்வு :
ஒருவருக்கு போதுமான அளவு ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். பொதுவாக முதலீட்டில் கவனம் செலுத்தும் அளவுக்கு, பலரும் காப்பீட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, ஆயுள் காப்பீடு, மற்றும் மருத்துவ காப்பீட்டை ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்த வேண்டும்.
அவசர கால நிதி :
எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க, தனியே நிதி உருவாக்கியிருப்பது அவசியம். அவசர கால நிதி என, குறிப்பிடப்படும் இத்தகைய சேமிப்பு இல்லை எனில், போனசில் ஒரு பகுதியை, இந்த நிதிக்காக ஒதுக்கி முதலீடு செய்யலாம். ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் அதை அதிகரிப்பது பற்றியும் பரிசீலிக்கலாம்.
வீட்டுக்கடன் :
பலரும் வீட்டுக்கடன் பெற்றிருக்கலாம். பொதுவாக வீட்டுக்கடன் பெற்றவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது, பகுதி அளவு அசலை அடைக்க முயல்வது நல்லது. அசலை குறைப்பதன் மூலம் வட்டியை குறைக்கலாம். போனஸ் தொகை வாயிலாக, வீட்டுக்கடன் அசலில் ஒரு பகுதியை அடைக்கலாம். முழுத்தொகையையும் அடைக்க வேண்டியதில்லை.
-செலவு செய்யுங்கள் :
முக்கிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்த பின் இனி, எஞ்சியுள்ள தொகையை செலவு செய்யலாம். விரும்பிய பொருள் வாங்கலாம். விடுமுறை பயணம் சென்று வரலாம். போனஸ் தொகை, உங்கள் பணம் என்றாலும், அதை செலவு செய்வதில் கவனம் செலுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|