பதிவு செய்த நாள்
01 நவ2018
14:49
புதுடில்லி : அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அருண் ஜெட்லி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2018 ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்துள்ளது. குறைந்த வட்டி, குறைந்த வரி ஏய்ப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியன ஜிஎஸ்டி வெற்றி. ஒரே ஒரு வரி மட்டுமே. இடைத்தரகர்களின் தலையீடு புறந்தள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன்படி நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|