அப்படியா    அப்படியா ...  அக்டோபரில் ஜி.எஸ்.டி., வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது அக்டோபரில் ஜி.எஸ்.டி., வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது ...
தள்ளாட்டமில்லாத தயாரிப்பு துறை உற்பத்தி:15 மாதங்களாக தொடர் வளர்ச்சி கண்டு சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
02:07

புதுடில்லி:கடந்த அக்டோபரில், புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் குவிந்ததால், தயாரிப்பு துறையின் உற்பத்தி, சிறப்பான வகையில் வளர்ச்சியை கண்டுள்ளது.


இது குறித்து, ‘நிக்கி –மார்க்கிட்’ நிறுவனம்வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் அதிகரித்து உள்ளது.அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 53.1 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, செப்டம்பரில், 52.1 புள்ளிகளாக இருந்தது.ஆகஸ்டில், இக்குறியீடு, 51.7 புள்ளிகள் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.


தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியின் உரைகல்லாக விளங்கும், இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும்.இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 15 மாதங்களாக, உற்பத்தியில் வளர்ச்சி கண்டு வருகிறது.விளம்பரம்தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. அதனால், உற்பத்தியும் அதே அளவிற்கு உயர்ந்துள்ளது.


ஜூன் மாதத்திற்கு பின், இத்தகைய சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது.மக்களின் தேவை பெருகி வருவதும், சிறப்பான விளம்பர உத்திகளும், பொருட்களின் கவர்ச்சிகரமான விலையும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது.உள்நாட்டில், தயாரிப்பு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது; ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.எனினும், ஜூலை மாதத்தில் குவிந்த ஏற்றுமதி ஆர்டர்களை ஒப்பிடும் போது, அக்டோபரில், குறைவாகவே இருந்தது.


இருந்தபோதிலும், ஜூன் முதல், ஒட்டுமொத்த அளவில், புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்து வருகின்றன.இதை சமாளிக்க, தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதலாக பணியாளர்களை அமர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு, டிசம்பருக்கு பின், மதிப்பீட்டு மாதத்தில்,வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளன.நம்பிக்கைஇத்தகைய சூழல், தயாரிப்பு துறை நிறுவனங்களிடம், எதிர்காலம் குறித்து, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிறுவனங்கள், அடுத்த ஆண்டுக்கான, சந்தைப்படுத்தும் நடவடிக்கையை துவக்கி விட்டன. மேலும், ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக, முதலீடுகளை அதிகரிக்கவும் முனைந்துள்ளன. அதேசமயம், ரசாயனம், எரிபொருள், உலோகம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது.


சில நிறுவனங்கள், மூலப் பொருட்கள் விலை உயர்வை, நுகர்வோர் தலையில் சுமத்தி, லாப வரம்பை தக்க வைத்துக் கொண்டுள்ளன.தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரித்துள்ள போதிலும், அதன் தாக்கம், மிகக் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எட்டு பிரிவுகள்



அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானங்கள் உட்பட, எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட் நிறுவனம் ஆய்வு நடத்தி, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)