பதிவு செய்த நாள்
02 நவ2018
02:07
புதுடில்லி:கடந்த அக்டோபரில், புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் குவிந்ததால், தயாரிப்பு துறையின் உற்பத்தி, சிறப்பான வகையில் வளர்ச்சியை கண்டுள்ளது.
இது குறித்து, ‘நிக்கி –மார்க்கிட்’ நிறுவனம்வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் அதிகரித்து உள்ளது.அதனால், இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 53.1 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இது, செப்டம்பரில், 52.1 புள்ளிகளாக இருந்தது.ஆகஸ்டில், இக்குறியீடு, 51.7 புள்ளிகள் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியின் உரைகல்லாக விளங்கும், இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும்.இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 15 மாதங்களாக, உற்பத்தியில் வளர்ச்சி கண்டு வருகிறது.விளம்பரம்தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. அதனால், உற்பத்தியும் அதே அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்திற்கு பின், இத்தகைய சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது.மக்களின் தேவை பெருகி வருவதும், சிறப்பான விளம்பர உத்திகளும், பொருட்களின் கவர்ச்சிகரமான விலையும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது.உள்நாட்டில், தயாரிப்பு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது; ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.எனினும், ஜூலை மாதத்தில் குவிந்த ஏற்றுமதி ஆர்டர்களை ஒப்பிடும் போது, அக்டோபரில், குறைவாகவே இருந்தது.
இருந்தபோதிலும், ஜூன் முதல், ஒட்டுமொத்த அளவில், புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்து வருகின்றன.இதை சமாளிக்க, தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதலாக பணியாளர்களை அமர்த்தியுள்ளன. கடந்த ஆண்டு, டிசம்பருக்கு பின், மதிப்பீட்டு மாதத்தில்,வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளன.நம்பிக்கைஇத்தகைய சூழல், தயாரிப்பு துறை நிறுவனங்களிடம், எதிர்காலம் குறித்து, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனங்கள், அடுத்த ஆண்டுக்கான, சந்தைப்படுத்தும் நடவடிக்கையை துவக்கி விட்டன. மேலும், ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக, முதலீடுகளை அதிகரிக்கவும் முனைந்துள்ளன. அதேசமயம், ரசாயனம், எரிபொருள், உலோகம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது.
சில நிறுவனங்கள், மூலப் பொருட்கள் விலை உயர்வை, நுகர்வோர் தலையில் சுமத்தி, லாப வரம்பை தக்க வைத்துக் கொண்டுள்ளன.தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரித்துள்ள போதிலும், அதன் தாக்கம், மிகக் குறைவாகவே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எட்டு பிரிவுகள்
அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானங்கள் உட்பட, எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட் நிறுவனம் ஆய்வு நடத்தி, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|