அக்டோபரில் ஜி.எஸ்.டி., வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது அக்டோபரில் ஜி.எஸ்.டி., வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது ...  மாற்றமில்லாத மாருதி விற்பனை  நிலவரம் மாற்றமில்லாத மாருதி விற்பனை நிலவரம் ...
குறு, சிறு, நடுத்தர நிறுவன ஆதரவு திட்டம்:பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
02:27

புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான, புதிய திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.


இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆதரவு திட்டத்தை, பிரதமர் மோடி, நவ., 2ல் துவக்கி வைக்க உள்ளார்.இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சுலபக் கடன் வழங்குவது தயாரிப்பு பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது, புதிய தொழில் துவங்குவோருக்கான உதவி மைய வசதி உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என, தெரிகிறது.இ


த்திட்டம், நாட்டில் உள்ள, 100 மாவட்டங்களில், 100 நாட்களுக்கு அமலில் இருக்கும்.மத்திய அமைச்சர்கள்,இந்த மாவட்டங்களுக்குச் சென்று, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஏற்றுமதிசிறிய அளவிலான தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோருக்கு, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, குறித்த காலத்தில் போதுமான நிதி வசதி கிடைப்பதில்லை. வங்கிக்கடன் கிடைப்பதும் கடினமாக உள்ளது.இது, 2016, நவ., 8ல், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், மேலும் மோசமடைந்துள்ளது.உரிய நேரத்தில் கடன் வசதி கிடைக்காமல் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக, ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ஜி.எஸ்.டி.,யால், இத்துறையின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இத்தகைய நிலையை மாற்றும் நோக்கில், இன்று, புதிய திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.வேலைவாய்ப்புமொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. இதன் பங்கு, தயாரிப்பு துறையில், 45 சதவீதம்; ஏற்றுமதியில், 40 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. இத்துறையில், 97 சதவீதம் பேர், அமைப்பு சாரா பிரிவில் உள்ளனர். நாட்டில், 6.30 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இத்துறை, 11.10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)