பதிவு செய்த நாள்
02 நவ2018
02:27
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான, புதிய திட்டத்தை, பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஆதரவு திட்டத்தை, பிரதமர் மோடி, நவ., 2ல் துவக்கி வைக்க உள்ளார்.இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சுலபக் கடன் வழங்குவது தயாரிப்பு பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது, புதிய தொழில் துவங்குவோருக்கான உதவி மைய வசதி உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என, தெரிகிறது.இ
த்திட்டம், நாட்டில் உள்ள, 100 மாவட்டங்களில், 100 நாட்களுக்கு அமலில் இருக்கும்.மத்திய அமைச்சர்கள்,இந்த மாவட்டங்களுக்குச் சென்று, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஏற்றுமதிசிறிய அளவிலான தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோருக்கு, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, குறித்த காலத்தில் போதுமான நிதி வசதி கிடைப்பதில்லை. வங்கிக்கடன் கிடைப்பதும் கடினமாக உள்ளது.இது, 2016, நவ., 8ல், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், மேலும் மோசமடைந்துள்ளது.உரிய நேரத்தில் கடன் வசதி கிடைக்காமல் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக, ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ஜி.எஸ்.டி.,யால், இத்துறையின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இத்தகைய நிலையை மாற்றும் நோக்கில், இன்று, புதிய திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.வேலைவாய்ப்புமொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது. இதன் பங்கு, தயாரிப்பு துறையில், 45 சதவீதம்; ஏற்றுமதியில், 40 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. இத்துறையில், 97 சதவீதம் பேர், அமைப்பு சாரா பிரிவில் உள்ளனர். நாட்டில், 6.30 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இத்துறை, 11.10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|