பதிவு செய்த நாள்
03 நவ2018
23:25
கோல்கட்டா:கடந்த, செப்., நிலவரப்படி, 1,098 நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.இவற்றில், 52 நிறுவனங்கள், தீர்வு திட்டத்தின் கீழ், கடனை திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டன. 212 நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு, கடனை திரும்பத் தரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேல்முறையீடு மற்றும் மறுசீராய்வு நடவடிக்கையில், 118 நிறுவனங்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.திவால் நடவடிக்கையில், சராசரியாக, 50 சதவீத கடன் திரும்பப் பெறப்படுகிறது. ஒரு சில வழக்குகளில், 65 சதவீத தொகையும், சிலவற்றில், அனைத்து கடனும் வசூலிக்கப்பட்டுள்ளன.மோசடி, மதிப்பை குறைத்து காட்டியது,
அபரிமிதமான பரிவர்த்தனைகள் போன்றவை தொடர்பாக, 192 நிறுவனங்கள் மீது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.செப்., இறுதி நிலவரப்படி, 269 நிறுவனங்கள், கடனை திரும்பத் தர, தன்னிச்சையாக சொத்துகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளன.திவால் நடவடிக்கை கோரி, தொழில் மற்றும் நிதி சீராய்வு வாரியம் அதிகபட்ச விண்ணப்பங்களை அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|