பதிவு செய்த நாள்
05 நவ2018
00:44
அக்டோபர் மாதம் கண்ட ஏற்ற இறக்கங்களை கடந்து, சற்றே சோர்வோடு தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தை நோக்கி சந்தை நகர்கிறது.நிதித்துறை பங்குகள் என்ன ஆகும்?
பொருளாதார
செய்திகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சூழலில், சந்தை
செல்லும் திசையறியாது, முதலீட்டாளர்கள் குழம்பியிருப்பது
தெளிவாக வெளிப்படுகிறது.அக்டோபரில் வெகுவாக சரிந்த
நிதித்துறை பங்குகள், மீண்டும் இழந்த மதிப்பை பெறுமா... என்ற கேள்வி
முதலீட்டாளர்கள் மனதில் முக்கிய இடம் வகிக்கிறது.கூடவே,
இதுவரை
சந்தையின் தலைமையை கைப்பற்றி வைத்திருந்த இத்துறை
பங்குகள், அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுமா... என்ற
சந்தேகமும்எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு சந்தைக்கு தலைமை வகித்த
குறிப்பிட்ட நிதித்துறை பங்குகள், தற்போது, இழந்த மதிப்பு
முழுவதையும் மீண்டும் எளிதில் திரும்ப பெறமுடியாது, என்பதில்
சந்தேகமில்லை.இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம்,
அந்த பங்குகள், சமீபகாலத்தில் எட்டிய வானளாவிய மதிப்பு. நிறுவன
வளர்ச்சியை பெரிதும் கடந்து, முதலீட்டு வரைமுறைகளால்
நியாயப்படுத்த முடியாத நிலையை அவை தொட்டன.
இந்த நிறுவனங்கள், மீண்டும்
வளர்ச்சிப் பாதைக்கு திரும்பினாலும், அவை காணும் வளர்ச்சியின்
விளைவாக, பங்கு விலைகள் சமீபத்தில் எட்டிய உச்சங்களை மீண்டும் தொட
வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, அந்த வளர்ச்சிக்கு, முன்பு போல, நியாயப்படுத்த முடியாத அளவிலான சந்தை தரும் மதிப்பீடும் கிடைக்காது.ஆக, மெதுவான விலை வளர்ச்சியை மட்டுமே, சமீபத்தில் சந்தையின் பிடிப்பை பெற்ற நிதித்துறை பங்குகளில் எதிர்பார்க்கலாம்.
அத்தகைய
சூழலில், குறுகிய காலத்தில், பழக்கப் போக்கில் மீண்டும் விலை
வேகமாக உயரும்பட்சத்தில், பல பங்குகளை விற்றுவிட்டு வெளியேற
வேண்டிய கட்டாயம், முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது. இதை உணர்ந்து
நடப்பது நல்லது.அரசோ, ரிசர்வ் வங்கியோ எடுக்கும் தற்காலிக
முடிவுகள், நிறுவனங்களின் கஷ்டங்களுக்கு ஒரு தற்காலிக
நிவாரணமாக இருக்குமே தவிர, அது நெடுங்கால தீர்வாக அமையாது. சந்தை
நிவாரணத்தை தீர்வாக புரிந்துகொண்டால், அதன் விலையை
முதலீட்டாளர்கள்தான் கொடுக்க வேண்டும்.
அடுத்து, சந்தையின் தலைமைக்கு வருவோம்.வரும்
ஆண்டில், சந்தையின் தலைமை நிதித்துறை வசமே இருக்குமா? இந்த
கேள்விக்கான விடையை, சற்று நுணுக்கமாக அணுகி அறிய வேண்டும்.நிதித்துறை,
தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை வழிநடத்தும் ஒரு முன்னணி
இயந்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் பொருளாதார
முக்கியத்துவம் குறையவும் வாய்ப்பில்லை.
அத்தகைய
சூழ்நிலையில், சந்தையின் தலைமை அதனிடம் தொடர்ந்து நிலைக்கும்.
ஆனால், தற்போதுள்ள அளவு முக்கியத்துவம் இருக்காது என்றே
தோன்றுகிறது.புதிய துறைகள் சந்தையில் முக்கியத்துவம் பெற்று, அதன் தாக்கம் குறியீடுகளிலும் வெளிப்படும் என்றே தோன்றுகிறது. உற்பத்தி
துறை, பலகாலமாக நலிந்திருந்த நிலைமை மாறி, வரும் ஆண்டுகளில்
வளமையும், வலிமையும் வெளிப்படுத்தும் துறையாக மாறும் என்பதற்கான
ஆரம்ப அறிகுறிகள் தெரிகின்றன.
இந்த மாற்றங்களை உன்னிப்பாக
தொடர்ந்து கவனித்து, அவற்றின் தாக்கத்தை சரியாக அளவிட்டு, பலன் பெறும்
நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடு செய்வது, நம்
ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளிலும், நிறுவன ஆய்வுகளிலும் ஈடுபடுவது, நமது முக்கிய பணியாக இருக்க வேண்டியது அவசியம்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|