பதிவு செய்த நாள்
06 நவ2018
02:37
புதுடில்லி:மத்திய நிதியமைச்சகம், 11 பொதுத் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய, 'சி.பி.எஸ்.இ.,' எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீடு மூலம், 8,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கெனவே மூன்று முறை, ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, ஐ.ஓ.சி., உள்ளிட்ட 10 நிறுவனங்களை உள்ளடக்கிய, 'சி.பி.எஸ்.இ.,' எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டு வெளியீட்டில், 11,500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது
.இம்மாத இறுதியில், நான்காம் கட்ட வெளியீடு மூலம், 8,000 கோடி ரூபாய் திரட்டப்படும்.கெயில், இன்ஜினியர்ஸ் இந்தியா, கன்டெய்னர் கார்ப்., ஆகிய மூன்று நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 55 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.அதனால், இம்முறை, இந்த மூன்று நிறுவனங்களுக்கு பதிலாக, எம்.ஓ.ஐ.எல்., கே.ஒய்.ஓ.சி.எல்., உட்பட, நான்கு நிறுவனங்கள் சேர்க்கப்பட உள்ளன.நடப்பு நிதியாண்டில், இதுவரை, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 15ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியுள்ளது. முழு நிதியாண்டில், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|