பதிவு செய்த நாள்
06 நவ2018
02:44
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை, அக்டோபரில், மிகச் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அதிக அளவில் புதிய ஆர்டர்கள் கிடைத்ததால், இத் துறையில், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் வெளி மதிப்பு குறைவு போன்றவற்றால், செப்டம்பரில், சேவைகள் துறைக்கான தேவை குறைந்திருந்தது. அதனால், அம்மாத வளர்ச்சி, மிதமான அளவிற்கே இருந்தது.கூடுதல் ஊழியர்கள்ஆனால், அக்டோபரில், சேவை நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்தன. சந்தை நிலவரமும் சாதகமாக இருந்தது. அதிக வாடிக்கையாளர்களும், விளம்பர உத்திகளும், சேவை துறைக்கான தேவையை அதிகரிக்க துணை புரிந்தன.இதையடுத்து, சேவை துறை நிறுவனங்கள், கூடுதல் ஊழியர்களை நியமித்து, பணிகளை விரைந்து முடித்துக் கொடுத்தன.இந்தவகையில், சேவைகள் துறையில், 2011 மார்ச் மாதத்திற்கு பின், வேலைவாய்ப்பு வளர்ச்சி மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக, ஜூலைக்கு பின், அக்.,ல், சேவைகள் துறையின் வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது.53 புள்ளிஅதனால், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், 'நிக்கி இந்தியா எஸ்.பி.ஏ.ஐ.,'குறியீடு, 52.2 புள்ளிகளை எட்டிஉள்ளது.இது, செப்டம்பரில், 50.9; ஆகஸ்டில், 51.5 புள்ளிகளாக இருந்தது. இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், வளர்ச்சியாக கருதப்படும்.சேவைகள் துறை, தொடர்ந்து, ஐந்து மாதங்களாக வளர்ச்சி நடைபோடுகிறது.மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், ‘என்.ஐ.சி., பி.எம்.ஐ.ஓ.,’ குறியீடு, 53 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.இது, செப்.,ல், 51.6 புள்ளிகளாக இருந்தது. தனியார் துறையின் சிறப்பான பங்களிப்பால், ஜூலைக்கு பின், இப்பிரிவின் வளர்ச்சி நன்கு இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நடப்பு, 2018-–19ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டின் துவக்கமே சிறப்பாக உள்ளது. ஆய்வு முடிவுகள், வலுவான பொருளாதார வளர்ச்சியை காட்டுகின்றன. சேவைகள் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.இருந்த போதிலும், செப்டம்பர் வளர்ச்சியில், தனியாரின் பங்களிப்பு, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, குறைவாக இருந்தது. ஆனால், அக்டோபரில் தனியார் பங்களிப்பு மீண்டும் அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் தவிர, பணவீக்கத்தின் தாக்கமும், குறைவாகவே இருந்தது. எனினும், சில நிறுவனங்கள், சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சந்தை நிலவரம் திருப்தியாக உள்ள போதிலும், அரசியல் சூழல் காரணமாக, பாதிப்பு வருமோ என்ற கவலை, சேவை நிறுவனங்களிடம் காணப்படுகிறது. அதனால், மிகுந்த எச்சரிக்கையுடன், வர்த்தகச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன.– பாலியானா டி லிமா, முதன்மை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|