பதிவு செய்த நாள்
14 நவ2018
23:14
புதுடில்லி:மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலுக்கு முடிவு காணப்பட்டு, முக்கிய பிரச்னைகளில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் விருப்பத்தின் பேரில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விதிமுறைகளை தளர்த்த, ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுஉள்ளதாக தெரிகிறது.பணப்புழக்க பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 11 வங்கிகள் மீதான, தீவிர கண்காணிப்பு விதிமுறையை தளர்த்த வேண்டும் என்ற, மத்திய அரசின் கோரிக்கையை, ரிசர்வ் வங்கி, 19ம் தேதி நடைபெறும் இயக்குனர் குழு கூட்டத்தில் பரிசீலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.விதிகளை தளர்த்தினால், இவ்வங்கிகளும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு கடன் வழங்க முடியும்.
இத்துறை, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இத்துறை, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப, தாராளமாக கடன் வழங்குவது அவசியம் என, மத்திய அரசு கருதுகிறது.இது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், முடிவுக்கு வந்து, சுமுக சூழலுக்கான அறிகுறி தோன்றியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|