பதிவு செய்த நாள்
15 நவ2018
10:48
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (நவ.,15) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளது. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வருவதாலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து அதிகரித்திருப்பதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்படுவதாலும் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 115.89 புள்ளிகள் உயர்ந்து 35,257.88 புள்ளிகளாகவும், நிப்டி 30.25 புள்ளிகள் உயர்ந்து 10,606.55 புள்ளிகளாகவும் உள்ளன. ஹீரோ மோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், என்டிபிசி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.61 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வுடன் காணப்படுகின்றன.
அதே சமயம் ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 6 சதவீதம் சரிவடைந்துள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை ஷங்காய் பங்குச்சந்தை 0.58 சதவீதமும், ஹாங்காங் பங்குச்சந்தை 0.11 சதவீதமும் உயர்வுடன் காணப்படுகின்றன. இருப்பினும் ஜப்பான் பங்குச்சந்தை 0.25 சதவீதமும், அமெரிக்க பங்குச்சந்தை 0.81 சதவீதமும் சரிவுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|