விமானத்தில் 45 டன் சரக்குகள்  ஜெட் ஏர்வேஸ் சாதனை விமானத்தில் 45 டன் சரக்குகள் ஜெட் ஏர்வேஸ் சாதனை ...  ‘ஆன்லைன்’ விற்பனை நிறுவனம் மத்திய அரசு துவக்க கோரிக்கை ‘ஆன்லைன்’ விற்பனை நிறுவனம் மத்திய அரசு துவக்க கோரிக்கை ...
வெளிநாடுகளில் தடை: ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2018
00:02

ஓசூர்:நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், இந்திய மலர் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு, ஓசூரிலிருந்து ரோஜா ஏற்றுமதிபாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம், பாகலுார் சுற்று வட்டார பகுதிகளில், பசுமை குடில்கள் மூலம், 300 ஹெக்டேருக்கும் அதிகமாக ரோஜா சாகுபடி நடக்கிறது. ஓசூர் ரோஜாக்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்புள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களும் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றன.


ஆண்டுதோறும், காதலர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விஷேச நாட்களில், ஓசூர் ரோஜாக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். அப்போது, பெங்களூரு வர்த்தக மையத்துக்கு கொண்டு செல்லப்படும் ரோஜாக்கள், அங்கிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.


இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், ரசாயனம் இருப்பதாகக் கூறி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்திய மலர் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. இதனால், ஓசூர் ரோஜா ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.


இது குறித்து, ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர், பாலசிவபிரசாத் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களை குறிவைத்து, 20 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். வழக்கமாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரோஜா மலர்களை, ‘பேக்கிங்’ செய்து, ஏற்றுமதிக்கு அனுப்பும் போது களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவோம்.


இந்நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்திய மலர்களில் ரசாயனம் இருப்பதாகக் கூறி, ஐந்து மாதங்களுக்கு முன், மலர் இறக்குமதிக்கு தடை விதித்தன. இந்தாண்டு, 10 லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஓசூர் ரோஜாக்கள் இடத்தை, கென்யா, ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளின் மலர்கள் பிடித்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)