பதிவு செய்த நாள்
20 நவ2018
23:27
புதுடில்லி : ரிசர்வ் வங்கி பின்பற்றும், இ.சி.எப்., எனப்படும், பொருளாதார மூலதன நடைமுறை குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நேற்று முன்தினம் நடைபெற்ற, ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டத்தில், இ.சி.எப்., குறித்து ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைப்பது என, ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.இக்குழுவிற்கான, வல்லுனர்கள் தேர்வு மற்றும் குழுவின் அதிகார வரம்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் இணைந்து தீர்மானிக்க உள்ளன.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது, 9.69 லட்சம் கோடி ரூபாய், உபரி நிதி கையிருப்பில் உள்ளது. இதில், இ.சி.எப்., விதிமுறைகளை ஆய்வு செய்து, எந்த அளவிற்கு, உபரி நிதியை ரிசர்வ் வங்கி, கையிருப்பாக வைத்திருக்கலாம் என, வல்லுனர் குழு முடிவு செய்யும்.மேலும், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான, அறிவிப்பையும், ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.
அத்துடன், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் உள்ள வங்கிகள் தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|