பதிவு செய்த நாள்
20 நவ2018
23:31
மும்பை : கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் வெளிமதிப்பு குறைவு போன்றவற்றுக்கு இடையிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் வர்த்தக நம்பிக்கை அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
சிட்பி மற்றும் கிரிசில் நிறுவனங்கள் இணைந்து, 1,100 நிறுவனங்களிடம், ஜூலை – செப்டம்பர் காலாண்டு நிலவரம் குறித்து, ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளன.அதன் விபரம்:மதிப்பீட்டு காலாண்டில், வர்த்தகம் குறித்து, பெரும்பான்மையான சிறிய நிறுவனங்கள் திருப்தி தெரிவித்துள்ளன.
தயாரிப்பு :
அவற்றில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையைச் சேர்ந்த, 40 சதவீத நிறுவனங்கள், வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளன.இதைவிட மேலான வளர்ச்சி, அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் இருக்கும் என, 50 சதவீத நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.வாகன உதிரிபாகங்கள், பொறியியல் மற்றும் மூலதன சாதனங்கள், உலோகம், சுரங்கம், ஆரோக்கிய பராமரிப்பு, மின்சாரம், சுற்றுலா, ஓட்டல் உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
முந்தைய இரண்டு காலாண்டுகளை விட, அதிக, ‘ஆர்டர்’ கிடைத்ததாக, 40 சதவீத, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு, ‘ஆர்டர்’ சற்று குறைந்துள்ளன.நிதி நிறுவனங்கள்ஆய்வு செய்த, 10 நிதி நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தகம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. மூன்று நிறுவனங்கள், திருப்திகரமாக உள்ளதாக கூறியுள்ளன.
ஒன்பது நிறுவனங்கள், அக்டோபர் – டிசம்பர் காலாண்டிலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்ந்த வர்த்தகம் நன்கு இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதேசமயம், வாராக் கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என, ஆறு நிறுவனங்களும், குறையும் என, முன்று நிறுவனங்களும் கூறியுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|