பதிவு செய்த நாள்
21 நவ2018
23:16
புதுடில்லி : மத்திய அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக, பூனம் குப்தா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூனம் குப்தா, உலக வங்கியில், இந்தியாவிற்கான, தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை மையத்தில், ரிசர்வ் வங்கியின் தலைமை பேராசிரியராக பணிபுரிந்த அனுபவமும், இவருக்கு உண்டு.இவர் பெயருடன், ஜே.பி.மார்கன் நிறுவனத்தில், இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக உள்ள, சாஜித் சின்னாய், இந்திய வணிகவியல் மைய பேராசிரியர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோர் பெயர்களும், பரிசீலனையில் உள்ளன.
எனினும், உலக வங்கியில் பணிபுரிவதால், பூனம் குப்தாவிற்கே, தலைமை பொருளாதார ஆலோசகராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு நடந்தால், இப்பதவியில் அமரும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுவார்.
ஏற்கனவே, இப்பதவியில் இருந்த அரவிந்த் சுப்ரமணியன், ரகுராம் ராஜன் ஆகியோரும், பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவற்றில் பொருளாதார ஆலோசகர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|