பதிவு செய்த நாள்
26 நவ2018
06:57
இணையத்தில் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், இந்திய வாடிக்கையாளர்கள் இணைய ஷாப்பிங்கில், ‘ரிஸ்க்’ எடுக்க தயாராக இருப்பது தெரிய வந்துள்ளது.
சைபர் பாதுகாப்பு சேவையை அளிக்கும் மெக்கபீ நிறுவனம் நடத்திய ஆய்வில், 74 சதவீதத்தினர் அறிமுகம் இல்லாத ஷாப்பிங் தளங்களை ‘கிளிக்’ செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன் அவை பற்றி ஆய்வு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், விழா காலங்களில், இணையத்தில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் இ – மெயில் முகவரி, மொபைல் எண் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சைபர் கிரிமினல்கள், சமூக ஊடகங்கள் மூலம் திரட்டும் தகவல்களை வைத்து மோசடியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|