பதிவு செய்த நாள்
08 டிச2018
04:48
புதுடில்லி:'யுனிபார்ட்ஸ்' இந்தியா நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி'யிடம் விண்ணப்பித்துள்ளது.யுனிபார்ட்ஸ் இந்தியா நிறுவனம், பொறியியல் சாதனங்கள் மற்றும் தீர்வுகள் பிரிவில் இயங்கி வரும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 100 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை, பங்குச் சந்தையில் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.மேலும், பங்குதாரர்கள்வசம் இருக்கும், 1 கோடியே, 30 லட்சத்து, 60 ஆயிரத்து, 770 பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.பங்கு விற்பனை மூலமாக திரட்டப்படும் நிதியை, நிலுவையில் உள்ள கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இதற்கு முன்பாக, 2014ம் ஆண்டு பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக செபியிடம் விண்ணப்பித்து அனுமதியும் பெற்றது. ஆனால் பங்கு வெளியீட்டுக்கு வராமல் தவிர்த்து விட்டது. இப்போது மீண்டும் பங்குச் சந்தைக்கு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|