பதிவு செய்த நாள்
12 டிச2018
23:22
மும்பை:‘‘ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமம் காக்கப்படும்,’’ என, அதன் புதிய கவர்னர், சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில், ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:முதல் வேலையாக, பொதுத் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.ரிசர்வ் வங்கி, ஓர் உயரிய அமைப்பு; அதற்கு, நெடிய பாரம்பரிய வரலாறு உள்ளது. அதன் தன்னாட்சி சுதந்திரம், நம்பகத்தன்மை, நேர்மையான செயல்பாடு ஆகியவை தொடர்ந்து பேணப்படும் என, உறுதி கூறுகிறேன்.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில், நாட்டை நிர்வகிக்கும் அரசின் பங்கு முக்கியமானதாக உள்ளது. மத்திய அரசு உட்பட, ரிசர்வ் வங்கியுடன் தொடர்புள்ள ஒவ்வொரு அமைப்பின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்படும்.மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உள்ள நல்லிணக்கம் தடைபட்டு உள்ளதாக நான் கருதவில்லை.
ரிசர்வ் வங்கியின் முக்கிய பணியாக, பணவீக்க இலக்கு நிர்ணயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, உர்ஜித் படேல் பதவி விலகினாரா என்ற கேள்விக்கு, பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|