பதிவு செய்த நாள்
21 டிச2018
23:34
மும்பை : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம் மற்றும் அதன் இரண்டு துணை நிறுவனங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதி கோரி, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.இது குறித்து பதில் அளிக்குமாறு, ரிசர்வ் வங்கி, ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்ட தீர்ப்பாயம், மத்திய அரசின் மனு மீதான விசாரணையை, அடுத்த ஆண்டு, ஜன., 1க்கு ஒத்தி வைத்துள்ளது.
ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., குழுமம், 94 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இக்குழுமத்தின் கணக்கு விபரங்களை, தீவிர மோசடி தடுப்பு புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது.அதில், பல ஆண்டுகளாக, பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, ஐ.எல்., அண்ட் எப்.எஸ்., குழும கணக்கு விபரங்களை ஆராய, முதன் முறையாக, 2013ம் ஆண்டின் புதிய நிறுவன சட்டம், பிரிவு, 130ன் கீழ், மத்திய அரசு, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|