பதிவு செய்த நாள்
21 டிச2018
23:40
ஈரோடு : மரவள்ளி கிழங்கு அறுவடை நடந்து வரும் நிலையில், சேகோ ஆலைகள், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதால், மரவள்ளி கிழங்கு தேக்கமடைந்து, விலை சரிந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி, அந்தியூர், சத்தி, கோபி, பவானி, கொடுமுடி, சேலம் மாவட்டம் ஆத்துார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்பட பல இடங்களில், மரவள்ளி கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது, 1 டன் மரவள்ளி கிழங்கு, 5,500 முதல், 5,800 ரூபாய்க்கு கொள்முதலாகிறது. அதேபோல், 90 கிலோ மூட்டை ஜவ்வரிசி, 3,200 ரூபாய், ஸ்டார்ச், 2,400 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
மரவள்ளி கிழங்கு அறுவடை, தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம், ஆத்துார், ராசிபுரம் பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகள், உற்பத்தியை குறைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தும் வகையில், வாரம் இரண்டு நாள், ஆலைக்கு விடுப்பு அளிக்கின்றன. அறுவடை நேரத்தில் விடுமுறை விடுவதால், மரவள்ளி கிழங்கு தேக்கமாகி, விலை சரிவதாக, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர், சுதந்திரராசு கூறியதாவது:அறுவடை நடந்து வரும் நிலையில், ஆலைகளை மூடுவது தவறாகும். இதை, அந்தந்த மாவட்ட நிர்வாகமும், அரசும் அனுமதிக்கக் கூடாது. ஈரோடு மாவட்டத்தில் தினமும், 400 டன் மரவள்ளி கிழங்கு அறுவடையாகி, தேக்கமடைகிறது. இதனால் விலை சரிவு, வீணாவது அதிகரிக்கும். அரசு தலையிட்டு, முழு அளவில் கொள்முதல் செய்து, ஆலையை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|