பதிவு செய்த நாள்
24 டிச2018
23:34
அசாமில் கட்டப்பட்டுள்ள, நாட்டிலேயே மிக நீளமான போகிபீல் பாலத்துக்கு, 35 ஆயிரத்து, 400 டன் உருக்கை சப்ளை செய்திருக்கிறது, ‘செய்ல்’ நிறுவனம்.
பந்தன் பேங்க் மற்றும் குரு பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைய இருப்பதாக வெளியான செய்திகளை, இவ்விரு நிறுவனங்களும் மறுத்துவிட்ட நிலையில், இவற்றின் பங்குகள் நேற்று, 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தில், இந்த ஆண்டில் மட்டும், சில்லரை விற்பனை துறையில், 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 132 பேர், பணி இழப்பை சந்தித்துள்ளனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, ‘ஜாவா’ மோட்டார் சைக்கிள்களுக்கான, ‘ஆன்லைன்’ பதிவை, இன்று இரவுடன் நிறுத்தி வைப்பதாகவும், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை விற்பனை முடிந்துவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘பிரமல் என்டர்பிரைசஸ்’ நிறுவனம், பங்குகளாக மாறாத பத்திரங்கள் மூலமாக, 2,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிடுகிறது.
நாட்டில் 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர், கென்ஜி ஹிரமட்ஸு தெரிவித்துள்ளார்.
நாட்டில் 1,441 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், கென்ஜி ஹிரமட்ஸு தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|