பதிவு செய்த நாள்
19 ஜன2019
06:57
குஜராத்தில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குஜராத்தில், 55 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக, ‘அதானி’ குழுமத்தின் தலைவர், கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
‘டாடா’ குழுமம், குஜராத்தில், லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பில் இறங்க இருப்பதாக, நிறுவனத்தின் தலைவர், என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.லுாதியானாவில், 100 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க, பஞ்சாப் மாநில அரசு, ‘ஹீரோ சைக்கிள்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
‘சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன்’ நிறுவனம், 2020ல் இந்தியாவில் மின் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
‘ஆதித்ய பிர்லா’ நிறுவனம், குஜராத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாயை, மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாக, அதன் தலைவர், குமார் மங்களம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|