பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:27
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, வாகனத் துறையில் புதுமைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை, அறிமுகம் செய்துள்ளது.
’இந்த திட்டத்தின்படி, புதுமைகளையும், தீர்வுகளையும் வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, மாருதி அடையாளம் காணும். இந்த முயற்சி, எதிர்காலத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்க கூடியதாக இருக்கும்.‘இந்த திட்டத்தின் மூலம், தொழில்முனையும் ஆர்வமிக்கவர்கள், தங்கள் திறமைகளை, தேசிய அளவில் வெளிக்காட்டுவதற்கான மேடை அமைத்து தரப்படும்’ என, மாருதி தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான, கெனிச்சி அயுகவா கூறியுள்ளதாவது:இந்திய வாகன துறை, தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது. நாட்டின் தற்போதைய தேவை, புதுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்துவது தான்.மாருதியின் இந்த திட்டமானது, புதுமைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இருக்கும்.
கார்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், உள்கட்டமைப்புகள் ஆகியவை குறித்தான தங்கள் ஐடியாக்களை, எங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தெரிவிக்கலாம். அவற்றிலிருந்து சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்வு செய்து, அவர்களின் ஐடியாக்களை நிறைவேற்றும் வகையில், மாருதியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|