குறு, சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி? பொருட்களை கொள்முதல் செய்தோர் பதிலளிக்க, ‘கெடு’ குறு, சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு பாக்கி? பொருட்களை கொள்முதல் செய்தோர் ... ... பங்குச்சந்தைகளில் மந்தம் : ரூபாயின் மதிப்பு உயர்வு பங்குச்சந்தைகளில் மந்தம் : ரூபாயின் மதிப்பு உயர்வு ...
கவர்ச்சியான முதலீட்டு சந்தை: பிரிட்டனை விஞ்சியது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
23:48

டாவோஸ் : உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு, நேற்று துவங்கியது.இதில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின், சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரிகளின் கருத்துகளை தொகுத்து, பி.டபிள்யு.சி., நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.அ

தில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியா, இந்தாண்டு, பிரிட்டனை விஞ்சி, உலகின் நான்காவது கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தியா, வளரும் நட்சத்திரமாக ஜொலிக்கிறது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் முதலீட்டு களம் குறித்து, சி.இ.ஓ.,க்களின் நம்பிக்கை, முறையே, 27 மற்றும் 24 சதவீதமாக குறைந்துள்ளது.

இது, 2018ல், முறையே, 46 மற்றும் 33 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், ஜெர்மனி மீதான நம்பிக்கையும், 20 சதவீதத்தில் இருந்து, 13 சதவீதமாக குறைந்துள்ளது.பிரிட்டனில் முதலீடு செய்வது தொடர்பான ஆர்வம், ‘பிரெக்ஸிட்’ பிரச்னை காரணமாக குறைந்துள்ளது. இந்தியா, கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தை என்ற மதிப்பீட்டில், 8 சதவீதத்துடன், பிரிட்டனை விஞ்சி, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, கடந்த ஆண்டு, 9 சதவீதமாக இருந்தது.

இந்தவகையில், இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.தாயகம்இதே காலத்தில், தாயகத்தை தவிர, கவர்ச்சிகரமான முதலீட்டுக்கு ஏற்ற பிற நாடுகள் குறித்து கருத்து தெரிவிக்காதோர் சதவீதம், 8லிருந்து, 15 ஆக அதிகரித்துள்ளது. எந்த நாடும், முதலீட்டிற்கு ஏற்றது இல்லை என்போர், 1 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.

அடுத்த, 12 மாதங்களில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும் என, 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு, இது, 5 சதவீதமாக இருந்தது.கடந்த ஆண்டு, சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை, 29 சதவீதத்தில் இருந்து, 57 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இது, இந்தாண்டு, 42 சதவீதமாக குறைந்துள்ளது.

வர்த்தகப் போர், சுய பாதுகாப்பு போன்றவற்றால், வட அமெரிக்காவைச் சேர்ந்த, சி.இ.ஓ.,க்களிடம், பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை பெருமளவு குறைந்து உள்ளது.செயற்கை நுண்ணறிவுஅடுத்த ஓராண்டில், தங்கள் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி நன்கு இருக்கும் என தெரிவித்தோரின் எண்ணிக்கையும், 35 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் வர்த்தகத்தை அடியோடு மாற்றும் என, 85 சதவீத, சி.இ.ஓ.,க்கள் தெரிவித்துள்ளனர்.இத்தொழில்நுட்பம், இணையத்தை விட, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என, ஆய்வில் பங்கேற்றோரில், மூன்றில் இரு பங்கினர் கூறியுள்ளனர்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமான நாடு:
இந்தியா, மிக கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், வளரும் நட்சத்திரமாக மின்னுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பானையும், இந்தாண்டு, பிரிட்டனையும் இந்தியா விஞ்சி முன்னேறியுள்ளது. மேலும், வருவாய் வளர்ச்சி குறித்த நம்பிக்கையில், எப்போதும், தலைமை செயல் அதிகாரிகளின் விருப்பமான நாடாக விளங்குகிறது.பி.டபிள்யு.சி., ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)