பதிவு செய்த நாள்
28 ஜன2019
07:21
பல்வேறு காரணங்களுக்கான கேன்சல் செய்யப்பட்ட காசோலையை வழங்கும் போது, தவறான பயன்பாட்டைத் தவிர்க்க, அதை சரியான முறையில் கேன்சல் செய்து அளிப்பது அவசியம்.
காசோலைகளை வழங்கும் போது, அதற்குரிய முறையில் பூர்த்தி செய்வது அவசியம். அதே போலவே, கேன்சல்ட் செக் என சொல்லப்படும், கேன்சல் செய்யப்பட்ட காசோலைகளை சமர்ப்பிக்கும் போதும், சரியான முறையை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வங்கி கணக்கு ஒருவருக்கு உரியது என்பதை நிரூபிக்க, கேன்சல் செய்யப்பட்ட காசோலை பயன்படுகிறது. பெயர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள், இதற்கு உதவுகின்றன. வங்கி கணக்கு உண்மையானது தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
கே.ஒய்.சி., நடைமுறை, தானாக பணம் பிடித்தம் செய்யப்படுவதற்கான, இ.சி.எஸ்., உத்தரவு, கடனுக்கான விண்ணப்பம் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு துவக்கம் உள்ளிட்டவற்றின் போது, இவ்வாறு கேன்சல் செய்யப்பட்ட காசோலைகள் கேட்கப்படலாம். காப்பீடு பாலிசி வாங்கும் போது அல்லது காப்பீடு பணம் பெறும் போது, பி.எப்., தொகையை விலக்கி கொள்ளும் போதும், இவ்வாறு கேட்கப்படலாம். இது போன்ற தருணங்களில், காசோலையை சரியாக கேன்சல் செய்து அளிக்க வேண்டும்.
காசோலை நடுவே இரண்டு கோடுகளை போட்டு, அதில், ‘கேன்சல்டு’ என எழுத வேண்டும். இதை மறக்கக் கூடாது. இந்த வகை காசோலைகளில் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை. அடர்த்தியான மை கொண்ட பேனாவை பயன்படுத்தவும். முக்கியமாக, காசோலை பெறும் நபர், உரிய வங்கி அல்லது நிறுவனத்தை சேர்ந்தவர் தானா, என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாய்ப்பிருந்தால் நேரில் சென்று, இந்த நடை முறையை பூர்த்தி செய்வது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|