பதிவு செய்த நாள்
28 ஜன2019
11:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. வர்த்தகவாரத்தின் முதல்நாளில் இன்று(ஜன., 28), வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 180.50 புள்ளிகள் சரிந்து 35,845.04-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 60.70 புள்ளிகள் சரிந்து 10,719.85-ஆகவும் வர்த்தகமாகின.
முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் உயர்ந்து ரூ.70.98-ஆக வர்த்தகமானது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணைய் விலை சரிவடைந்ததன் காரணமாக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|