பதிவு செய்த நாள்
29 ஜன2019
23:11
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், இனி வாகனங்கள் விலையில் தள்ளுபடிகளை அறிவிக்குமா என்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
பொதுவாக, வாகன தயாரிப்பாளர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க, விலையில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கமான ஒன்று தான். கடந்த ஆண்டில், மாருதி நிறுவனமும் இத்தகைய தள்ளுபடிகளை அறிவித்தது.குறிப்பாக, மூன்றாவது காலாண்டில், அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்தது. ஆனால் விற்பனை எதிர்பார்ப்புக்கு மாறாக குறைந்தது. மேலும், மூன்றாவது காலாண்டு வருமானமும் சரிவை சந்தித்தது.
இதையடுத்தே, நடப்பாண்டில், மாருதி தள்ளுபடி சலுகைகளை அறிவிக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர், ஆர்.சி.பார்கவா, பத்திரிகை ஒன்றுக்கு, தள்ளுபடி சலுகைகள் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:ஒருமுறை நீங்கள் அதிகப்படியான தள்ளுபடி சலுகையை அறிவித்துவிட்டீர்கள் என்றால், வாடிக்ககையாளர்களின் மனநிலையும் மாறிப்போய்விடுகிறது. அவர்கள் ஆண்டு முழுக்க தள்ளுபடியை எதிர்பார்க்க துவங்கி விடுகின்றனர்எனவே, தள்ளுபடி குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும். கார்களை விற்பனை செய்வதற்கு தள்ளுபடி நல்ல வழியாக இருக்காது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மாருதி நிறுவனம், கடந்த மூன்றாவது காலாண்டில், 24 ஆயிரத்து, 300 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|