பதிவு செய்த நாள்
05 பிப்2019
00:09
ஐதராபாத்:‘‘நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 22 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்,’’ என, மத்திய வர்த்தக துறை செயலர், அனுப் வாதாவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர், ஐதராபாதில், செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது:கடந்த, 2008 -– 09ல், சர்வதேச பொருளாதார மந்தநிலையால், நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.இதையடுத்து, நிலைமை சீராகி, 2013- – 14ல், அதிகபட்சமாக, 31 ஆயிரத்து, 400 கோடி டாலர் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின், மூன்று நிதியாண்டுகளாக, ஏற்றுமதி வளர்ச்சி நிலையாக இருந்தது.
இந்நிலையில், சமீப காலமாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து, ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. அதனால், இறக்குமதி செலவினம் குறைந்துள்ளது.வர்த்தகப் போர் பதற்றம் போன்ற சர்வதேச சூழலுக்கு இடையிலும், நாட்டின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இதற்கு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் துணைபுரிந்துள்ளன.
தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு, வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.இதனால், குறிப்பாக, மருந்து, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி நன்கு உள்ளது.
ஏற்றுமதியில், தகவல் தொழில்நுட்பத் துறை பிரிவு, 10 சதவீத வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோலிய பொருட்கள், ஏற்று மதியில், 15 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன.சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
எனவே, நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி, மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்த, 31 ஆயிரத்து, 400 கோடி டாலரை தாண்டி, அதாவது, ரூபாய் மதிப்பில், 22 லட்சம் கோடியை தாண்டி உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|