ரூ.900 கோடி மெய்நிகர் நாணயம் தொழிலதிபர் மறைவால் முடக்கம் ரூ.900 கோடி மெய்நிகர் நாணயம் தொழிலதிபர் மறைவால் முடக்கம் ...  தேவைகள் குறைவால் தங்கம் விலை மந்தம் தேவைகள் குறைவால் தங்கம் விலை மந்தம் ...
பங்கு வெளியீட்டில் இரு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
23:33

புதுடில்லி:ஏ.பி.டி., எனும் அலைய்டு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டிலர்ஸ் நிறுவனம், 600- – 800 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.


இந்நிறுவனம், ஏற்கனவே, 2016ம் ஆண்டில் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முயற்சிகள் எடுத்தது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தால், தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது.இதன் பின், 2017ம் ஆண்டிலும் முயற்சி எடுத்து, பின் கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.


யுனிபார்ட்ஸ் இந்தியா நிறுவனம், பங்குகள் வெளியிடுவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அனுமதியை பெற்றுள்ளது.பொறியியல் சார்ந்த தீர்வுகள் வழங்கும் நிறுவனமான யுனிபார்ட்ஸ் இந்தியா, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் செய்திருந்திருந்தது.விண்ணப்பத்தை பரிசீலித்த செபி, தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது.


மேலும், தற்போது உள்ள பங்குதாரர்களின், 1 கோடியே, 30 லட்சத்து, 60 ஆயிரத்து, 770 பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து, கடன்களை அடைக்கவும் இதர நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தி கொள்ள உள்ளது இந்நிறுவனம்.


இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இதற்கு முன்பாக ஏற்கனவே, 2014ம் ஆண்டு செப்டம்பரில் பங்கு வெளியீட்டுக்காக விண்ணப்பம் செய்து, செபியின் அனுமதியையும் பெற்றிருந்தது. ஆனால் பங்கு வெளியீட்டுக்கு வரும் திட்டத்தை, அப்போது கைவிட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)