பதிவு செய்த நாள்
05 பிப்2019
23:33
புதுடில்லி:ஏ.பி.டி., எனும் அலைய்டு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டிலர்ஸ் நிறுவனம், 600- – 800 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே, 2016ம் ஆண்டில் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முயற்சிகள் எடுத்தது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தால், தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது.இதன் பின், 2017ம் ஆண்டிலும் முயற்சி எடுத்து, பின் கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
யுனிபார்ட்ஸ் இந்தியா நிறுவனம், பங்குகள் வெளியிடுவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் அனுமதியை பெற்றுள்ளது.பொறியியல் சார்ந்த தீர்வுகள் வழங்கும் நிறுவனமான யுனிபார்ட்ஸ் இந்தியா, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் செய்திருந்திருந்தது.விண்ணப்பத்தை பரிசீலித்த செபி, தற்போது அனுமதி வழங்கி உள்ளது.இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது.
மேலும், தற்போது உள்ள பங்குதாரர்களின், 1 கோடியே, 30 லட்சத்து, 60 ஆயிரத்து, 770 பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து, கடன்களை அடைக்கவும் இதர நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தி கொள்ள உள்ளது இந்நிறுவனம்.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஆக்சிஸ் கேப்பிட்டல், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இதற்கு முன்பாக ஏற்கனவே, 2014ம் ஆண்டு செப்டம்பரில் பங்கு வெளியீட்டுக்காக விண்ணப்பம் செய்து, செபியின் அனுமதியையும் பெற்றிருந்தது. ஆனால் பங்கு வெளியீட்டுக்கு வரும் திட்டத்தை, அப்போது கைவிட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|