பதிவு செய்த நாள்
07 பிப்2019
23:52
புதுடில்லி:வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பெறும் முதலீடுகளுக்கு, வரி விலக்கு அளிப்பதற்கான தகுதி நிர்ணயம் குறித்து, வருமான வரித் துறை பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், சுஷில் சந்திரா கூறியதாவது:ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க, ‘ஏஞ்சல் பண்டு’ எனப்படும், துவக்க கால நிதியுதவி நிறுவனங்கள் உதவுகின்றன. தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அங்கீகரிக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வருமான வரிச் சட்டம், 56, பிரிவு 2ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
எனினும், ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட, அது, துவக்க கால நிதியுதவி நிறுவனங்களிடம் இருந்து பெறும் முதலீடு அதிகமாக இருந்தால், அத்தொகைக்கு, 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.இந்த விதிமுறையின் கீழ், துவக்க கால முதலீடு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வருமான வரித் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது.
இதையடுத்து, ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகள், வருமான வரி துறையினரை சந்தித்து, இவ்வரி விதிப்பின் பாதிப்புகள் குறித்து கூறினர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.விரைவில், உண்மையான ஸ்டார்ட் அப் எது என்பதற்கான அளவுகேல் உருவாக்கப்படும்.
அதன்படி, எந்த நிறுவனத்தின் துவக்க கால முதலீட்டிற்கு, வருமான வரி விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.அதுவரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ஏஞ்செல் வரி விதிப்பு தொடர்பாக, வருமான வரி துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|