முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சிமுட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி ...  உயரே செல்லும்  உருக்கு விலை உயரே செல்லும் உருக்கு விலை ...
‘ஸ்டார்ட் அப்’ முதலீட்டிற்கு வரி விலக்கு:வருமான வரி துறை பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2019
23:52

புதுடில்லி:வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் பெறும் முதலீடுகளுக்கு, வரி விலக்கு அளிப்பதற்கான தகுதி நிர்ணயம் குறித்து, வருமான வரித் துறை பரிசீலித்து வருகிறது.


இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், சுஷில் சந்திரா கூறியதாவது:ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க, ‘ஏஞ்சல் பண்டு’ எனப்படும், துவக்க கால நிதியுதவி நிறுவனங்கள் உதவுகின்றன. தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அங்கீகரிக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வருமான வரிச் சட்டம், 56, பிரிவு 2ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


எனினும், ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட, அது, துவக்க கால நிதியுதவி நிறுவனங்களிடம் இருந்து பெறும் முதலீடு அதிகமாக இருந்தால், அத்தொகைக்கு, 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.இந்த விதிமுறையின் கீழ், துவக்க கால முதலீடு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வருமான வரித் துறை ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது.


இதையடுத்து, ஸ்டார்ட் அப் நிறுவன பிரதிநிதிகள், வருமான வரி துறையினரை சந்தித்து, இவ்வரி விதிப்பின் பாதிப்புகள் குறித்து கூறினர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.விரைவில், உண்மையான ஸ்டார்ட் அப் எது என்பதற்கான அளவுகேல் உருவாக்கப்படும்.


அதன்படி, எந்த நிறுவனத்தின் துவக்க கால முதலீட்டிற்கு, வருமான வரி விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.அதுவரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, ஏஞ்செல் வரி விதிப்பு தொடர்பாக, வருமான வரி துறை அனுப்பிய நோட்டீஸ் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)