பதிவு செய்த நாள்
15 பிப்2019
23:35
திருப்பூர்:இத்தாலி நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட, அதிநவீன சாயமேற்றும் இயந்திரம், திருப்பூர் வருகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டங்கள், விசைத்தறி துணி, பின்னலாடை உற்பத்தி ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளுக்கு சாயமேற்ற, வெவ்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, எம்.சி.எஸ்., நிறுவனம், ஓவன் மற்றும் நிட்டிங் துணிகளை ஒரே இடத்தில் சாயமேற்றும் புது வகை இயந்திரத்தை தயாரித்துள்ளது.
‘டைனமிக் ஸ்பின்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம், தோற்றத்தில், பின்னல் துணிக்கு சாயமேற்றும், ‘சாப்ட்புளோ’ இயந்திரம் போன்றது.ஆனால், சாயமேற்றுவதற்கு தனித்தனி சேம்பர்கள், கூடுதல் பம்ப், நாசில்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இயந்திரம், ஓவன் மற்றும் நிட்டிங் துணிகளுக்கு மிக நேர்த்தியாக சாயமேற்றும் திறனைக் கொண்டுள்ளது.
இதில், 3.5 லிட்டர் தண்ணீரில், 1 கிலோ துணிக்கு சாயமேற்ற முடியும்.இந்த அதிநவீன இயந்திரம், மார்ச் 1ல், திருப்பூரில், திருமுருகன்பூண்டி அருகே துவங்கும், ‘நிட் டெக்’ கண்காட்சியில், இடம்பெற உள்ளது.ஓவன், நிட்டிங் துறை சார்ந்து, சாயமேற்றும் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள், இரு வகை துணிகளுக்கு சாயமேற்ற, அதிக முதலீட்டில், வெவ்வேறு இயந்திரங்களை நிறுவ வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வாக, திருப்பூருக்கு முதன் முறையாக, இத்தாலி இயந்திரம் வருகிறது. இது, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலுக்கு புதிய உத்வேகத்தை தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|