பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:22
ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, ரயில் நிலையங்களுக்குள் சென்று வர, அனுமதி வழங்கக் கோரி, தெற்கு ரயில்வேக்கு, வணிக வரி துறை கடிதம் அனுப்பி உள்ளது.
மாநிலங்களுக்கு இடையே, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான, சரக்குகளை எடுத்துச் செல்ல, ‘ஆன்லைன்’ மூலம் அனுமதி பெற வேண்டும். இதே போன்று, மாநிலத்துக்கு உள்ளே, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல், எடுத்து செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும், ‘இ – வே பில்’ கட்டாயம் பெற வேண்டும்.ஆனால், ரயிலில் எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு, இ – வே பில் பெறுவதில்லை என, புகார் எழுந்தது. இதனால், ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, ரயில்வே துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது குறித்து, வணிகவரி துறை அதிகாரிகள் கூறியதாவது:வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து, சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் பொருட்கள், இ – வே பில் இல்லாமல் வருகிறது.சமீபத்தில், மும்பையில் இருந்து சென்னைக்கு, 140 பெட்டிகளில் சரக்குகள் வந்தன. இவை முறையான ஆவணங்கள் மற்றும் இ – வே பில் இல்லாமல் வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ய ரயில் நிலையத்துக்குள் சென்ற போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.
வணிகவரி அதிகாரிகளால் எளிதில் உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, ரயிலில் வரும் சரக்குகளை சோதனை செய்ய, வணிக வரி அதிகாரிகள் எளிதில் சென்று வர அனுமதி கோரி, தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.இதில், சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கு உள்ளே சென்று வர அனுமதி கோரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|