பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:25
புதுடில்லி : பொதுத் துறை வங்கிகளை உள்ளடக்கிய, ‘எக்ஸ்சேஞ் டிரேடட் பண்டு’ வெளியீட்டை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது, பொதுத் துறை நிறுவனங்கள் அடங்கிய, இரண்டு, இ.டி.எப்., எனப்படும், எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகள் செயல்பாட்டில் உள்ளன.சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., மற்றும் பாரத் – 22 இ.டி.எப்., என்ற இந்த திட்டங்கள், முதலீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன.
கடந்த வாரம், பாரத் – 22 இ.டி.எப்., மூன்றாம் கட்ட வெளியீட்டில், 10 மடங்கிற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.இதனால் உற்சாகம் அடைந்த மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகள் அடங்கிய, ‘வங்கி இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள், தனிப்பட்ட வங்கி பங்குகளில் முதலீடு செய்வதை விட, வங்கித் தொகுப்பில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவர்.அதனால், வரும் நிதியாண்டில், வங்கி இ.டி.எப்., வெளியீடு மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத் துறையைச் சேர்ந்த, 20 வங்கிகளில், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில், மத்திய அரசு, அதிகபட்சமாக, 87 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது.
வரும் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் இலக்கை விட, 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|