பதிவு செய்த நாள்
23 பிப்2019
23:25
புதுடில்லி: ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தை மீட்கும் முயற்சிக்கு, அதன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.பங்குதாரர்கள் அனுமதி வழங்கியது குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதிலிருந்து மீள்வதற்கு, அதன் கடன்களை பங்குகளாக மாற்றுவது உள்ளிட்ட முயற்சிகளில் இறங்கியது. இதற்கு, அதன் பங்குதாரர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றனர்.இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயலின் பங்கு, 51 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைகிறது. இன்னொரு பங்குதாரரான, ‘எதிகாட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் பங்கு, 24 சதவீதத்திலிருந்து, 12 சதவீதமாக குறைகிறது. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகள் இனி, எஸ்.பி.ஐ., வங்கி வசம் வருகிறது.நிறுவனத்தின் அறிக்கையின்படி, 97.99 சதவீதம்பங்குதாரர்கள், 11.4 கோடி புதிய பங்குகளை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|