பதிவு செய்த நாள்
22 மார்2019
11:27
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகவாரத்தின் இறுதிநாளில் உயர்வுடன் ஆரம்பித்து சரிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மார்ச் 22, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.52 புள்ளிகள் உயர்ந்து 38,506.27ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 36.35 புள்ளிகள் உயர்ந்து 11,557.40ஆகவும் வர்த்தகமாகின.
முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இருப்பினும் சற்றுநேரத்தில் பங்குச்சந்தைகள் சரிந்தன. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 83.89 புள்ளிகள் சரிந்து 38,302.86ஆகவும், நிப்டி 25.65 புள்ளிகள் சரிந்து 11,495.40ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.68.57ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|