பதிவு செய்த நாள்
04 ஏப்2019
23:57
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், பணியில்இருந்து விருப்ப ஓய்வு பெறும் திட்டத்திற்கு, இதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், நாடு முழுவதும்,1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். இதன் மொத்த வருவாயில், 65 சதவீதம் நிதி, ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனால், நிதி சுமை அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதன் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை, 58 ஆக குறைக்கவும், விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய வயதை, 60லிருந்து 58 ஆக குறைக்க, கார்ப்பரேட் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. இதற்கு, ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருந்தது.
இதனால், விருப்ப ஓய்வு பெறும் திட்டத்திற்கு, ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆண்டுக்கு, 1,650 கோடியிலிருந்து, 1,900 கோடி ரூபாய் வரை செலவை குறைக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|